24 666113c8983ce
இலங்கைசெய்திகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்கள்: மறுக்கும் இலங்கை அதிகாரிகள்

Share

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்கள்: மறுக்கும் இலங்கை அதிகாரிகள்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும், அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த 6 சந்தேகநபர்களை போதைக்கு அடிமையானவர்கள் எனவும் அவர்களை நாசகார செயலுக்கு பயன்படுத்த முயன்றார்களா என்பது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களை அபு என்ற நபரே வழிநடத்தியதாக கூறப்பட்டாலும், அவ்வாறானதொரு சந்தேகநபர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகிறது.

இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என இந்திய பொலிஸார் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தாக்குதல் நடத்த வந்ததாக இந்திய பாதுகாப்புத்துறை தெரிவித்திருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்ட பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், இந்தியாவில் பிடிபட்ட இலங்கையர்களுடன் தொடர்பில் இருந்த 6 பேரை ஹலவத்தை, மாவனல்லை, கொழும்பு பிரதேசங்களில் வைத்து கைது செய்திருந்தனர்.

குறித்த 6 பேர் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...