24 666113c8983ce
இலங்கைசெய்திகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்கள்: மறுக்கும் இலங்கை அதிகாரிகள்

Share

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்கள்: மறுக்கும் இலங்கை அதிகாரிகள்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும், அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த 6 சந்தேகநபர்களை போதைக்கு அடிமையானவர்கள் எனவும் அவர்களை நாசகார செயலுக்கு பயன்படுத்த முயன்றார்களா என்பது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களை அபு என்ற நபரே வழிநடத்தியதாக கூறப்பட்டாலும், அவ்வாறானதொரு சந்தேகநபர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகிறது.

இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என இந்திய பொலிஸார் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தாக்குதல் நடத்த வந்ததாக இந்திய பாதுகாப்புத்துறை தெரிவித்திருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்ட பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், இந்தியாவில் பிடிபட்ட இலங்கையர்களுடன் தொடர்பில் இருந்த 6 பேரை ஹலவத்தை, மாவனல்லை, கொழும்பு பிரதேசங்களில் வைத்து கைது செய்திருந்தனர்.

குறித்த 6 பேர் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...