24 666113c8983ce
இலங்கைசெய்திகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்கள்: மறுக்கும் இலங்கை அதிகாரிகள்

Share

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்கள்: மறுக்கும் இலங்கை அதிகாரிகள்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும், அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த 6 சந்தேகநபர்களை போதைக்கு அடிமையானவர்கள் எனவும் அவர்களை நாசகார செயலுக்கு பயன்படுத்த முயன்றார்களா என்பது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களை அபு என்ற நபரே வழிநடத்தியதாக கூறப்பட்டாலும், அவ்வாறானதொரு சந்தேகநபர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகிறது.

இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என இந்திய பொலிஸார் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தாக்குதல் நடத்த வந்ததாக இந்திய பாதுகாப்புத்துறை தெரிவித்திருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்ட பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், இந்தியாவில் பிடிபட்ட இலங்கையர்களுடன் தொடர்பில் இருந்த 6 பேரை ஹலவத்தை, மாவனல்லை, கொழும்பு பிரதேசங்களில் வைத்து கைது செய்திருந்தனர்.

குறித்த 6 பேர் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...