24 664ee17b22482
இலங்கைசெய்திகள்

அஹமதாபாத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்: வெளியான பின்னணி

Share

அஹமதாபாத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்: வெளியான பின்னணி

இந்தியாவின் அஹமதாபாத்தில்(Ahmedabad) கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களில் இருவர், முறையே 38 மற்றும் 40 தடவைகளாக இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொஹமட் நுஸ்ரத், மொஹமட் நஃப்ரான், மொஹமட் ரஸ்தீன் மற்றும் மொஹமட் பாரிஸ் ஆகியோரே இந்தியாவில் தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நுஸ்ரத் மற்றும் நஃப்ரான் ஆகியோரே இந்தியாவிற்கு “அடிக்கடி” பயணம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஏனைய இருவரும் முதன்முறையாக இந்தியாவுக்கு சென்றுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

மே 20 அன்று கைது செய்யப்பட்ட இவர்கள் நால்வரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்திய அதிகாரிகளின் கூற்றுப்படி, நுஸ்ரத் இதற்கு முன்னர் தங்கக் கடத்தல் வழக்கு மற்றும் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டவராவார்.

அதே நேரத்தில் நஃப்ரான் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஸ்தீனுக்கு எதிராக குறைந்தது மூன்று போதைப்பொருள் வழக்குகள் உள்ளதாகவும், ஃபரிஸிக்கு எதிராக இலங்கையில் போதைப்பொருள் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நால்வரும், கிறிஸ்தவர்கள், ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை இலக்குவைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில், அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருவதற்கும், பாகிஸ்தானில் இருந்து அவர்களை வழிநடத்திய அபுபக்கர் பக்தாதி காட்டிய வழியைப் பின்பற்றுவதற்கும் உடன்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...