24 660eae148cd20
இலங்கைசெய்திகள்

வெளிநாடொன்றில் உயிரிழந்த இலங்கை இளைஞர்கள்: உறவினர்கள் கோரிக்கை

Share

வெளிநாடொன்றில் உயிரிழந்த இலங்கை இளைஞர்கள்: உறவினர்கள் கோரிக்கை

டுபாயில் பணியாற்றிய நிலையில், உயிரிழந்த இளைஞர்கள் இருவரின் சடலங்களை நாட்டிற்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு பிரதேசங்களில் டுபாயில் பணியாற்றிய இருவர் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆராச்சிக்கட்டு நல்லதரன்கட்டு கிரிவேல்கெலேயைச் சேர்ந்த எஸ். எம். ஜி. தோட்டத்தில் வசிக்கும் பி. எம். 28 வயதான சந்துன் மதுசங்க என்ற திருமணமாகாத இளைஞரும், ஆராச்சிக்கட்டு அண்டன்வில்வத்தை இலக்கம் 343 இல் வசிக்கும் மொஹாந்திரம்லைச் சேர்ந்த ரமேஷ் உதர திலின என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் குருநாகலில் உள்ள பிரபல நிறுவனமொன்றில் இருந்து டுபாய்க்கு வேலைக்குச் சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் தினமும் தமது உறவினர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ள நிலையில், உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தமது உறவினர்களிடம் தாம் சுகவீனமுற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து உடல்நிலை மோசமடைந்ததையடுத்து உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரும் கடந்த 30ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இலங்கை அரசு தலையிட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை நாட்டுக்கு கொண்டு வந்து, முறையான விசாரணைகளை நடத்தி, மரணத்திற்கான காரணங்களை கண்டறியுமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சடலங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தனித்தனியாக 12 இலட்சம் ரூபாவிற்கு மேல் செலவாகும் எனவும், இது தொடர்பில் அரசாங்கம் உதவுமாறும் உறவினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டிற்கு கொண்டுவந்து பிரேத பரிசோதனை செய்யுமாறும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சிடம் வினவியபோது, ​​சட்டரீதியாக வெளிநாட்டில் மரணம் ஏற்பட்டால், அவர்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான குறிப்பிட்ட தொகையை வெளிவிவகார அமைச்சு வழங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...