4 26
இலங்கைசெய்திகள்

இலங்கையின் தொழிலாளர்ளுக்கு மகிழ்ச்சி செய்தி: அதிகரிக்கவுள்ள சம்பளம்

Share

இலங்கையின் அனைத்து துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்த சம்பளத்தை 27,000 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றையதினம்(21.05.2025) வெளியிடப்பட்டது.

அத்துடன், குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறைந்தபட்ச தினசரி சம்பளம் 1,800 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு 3ஆம் இலக்க தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் 3ஆம் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 01ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை குறைந்தபட்ச மாதாந்த சம்பளம் 9,500 ரூபாவாலும் குறைந்தபட்ச தினசரி சம்பளம் 380 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த வருடம் ஜனவரி 01ஆம் திகதி முதல், குறைந்தபட்ச மாதாந்த சம்பளத்தை 3,000 ரூபாவாலும் குறைந்தபட்ச தினசரி சம்பளம் 120 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் ஜனவரி 01ஆம் திகதி முதல், அனைத்து துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்த சம்பளம் 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...