tamilni 369 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் : தோழி தகவல்

Share

வெளிநாட்டில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் : தோழி தகவல்

அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த தனது தோழி சிங்கபூருக்கு சுற்றுலா சென்ற வேளையில் கணவனால் படுகொலை செய்யப்பட்டதாக அவரது தோழி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இலங்கை பெண் பலருக்கு தோழியாகவும், எப்போதும் அன்பான வார்த்தைகளையும் புன்னகையையும் கொண்டவர் என தோழியால் அன்புடன் நினைவுகூரப்பட்டார்.

எலிசபெத் கேம்பர் என்பவர் தனது வகுப்புத் தோழியான செவ்வந்தி மதுகா என்ற கொல்லப்பட்ட இலங்கை பெண்ணின் மரணம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை எழுதியுள்ளார்.

அவர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள லா ட்ரோப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பில் வகுப்பு தோழிகளாகும்.

கடந்த 9 ஆம் திகதி Holiday Inn Express Singapore Katong இல் இலங்கை பெண் அவரது கணவர் ஈஷான் என்பவரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

செவ்வந்தி சிங்கப்பூரில் விடுமுறையில் இருந்தபோது, இந்த சோகம் நடந்ததாக மெல்பேர்னில் அமைந்துள்ள அவரது பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிந்து இருந்த பின்னர் தனது கணவருடன் விடுமுறையில் செல்வதில் செவ்வந்தி மிகவும் உற்சாகமாக இருந்ததாக தோழி குறிப்பிட்டார்.

32 வயதான இவர், அவுஸ்திரேலியாவில் கல்வி பயின்று வந்த நிலையில், அவரது கணவர் இலங்கையில் பணிபுரிந்து வந்ததாக கேம்பர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...