19 6
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த இலங்கை பெண்: குடும்பத்தினர் தகவல்

Share

வெளிநாட்டில் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த இலங்கை பெண்: குடும்பத்தினர் தகவல்

வீட்டு வேலைக்காக டுபாய் சென்ற குடும்ப பெண் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கண்டி – கட்டுகஸ்தோட்டை, ரணவிரு மாவத்தையைச் சேர்ந்த மார்கரெட் ஐராங்கனி (வயது 57) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த ஐரங்கனியின் சடலம் நேற்று (17) டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

நீர்கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் அங்கவீனமடைந்த தனது கணவர் மற்றும் மூன்று மகள்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் நோக்கில் குறித்த பெண் வெளிநாட்டு தொழில் வாய்ப்பிற்காக சென்றிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், தாயின் மரணம் தொடர்பில் மகள் தெரிவிக்கையில், நீர்கொழும்பில் தந்தை விபத்திற்குள்ளான நிலையில் எங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அம்மா வெளிநாடு சென்று எனக்கும், அக்காவுக்கும் பணம் அனுப்பினார்.

கடந்த 5 ஆம் திகதி தாய்க்கு காய்ச்சல் ஏற்பட்டது. அம்மா உடன் இருந்த பெண் அழைப்பினை ஏற்படுத்தி அம்மாவிற்கு மூச்சு விடுவதற்கு கடினமாக உள்ளதாக கூறினார்.இதன் பின்னர் அன்று அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கடந்த 6 ஆம் திகதி அம்மா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து டுபாயில் உள்ள எங்கள் உறவினர் ஒருவரின் உதவியுடன் தாயின் உடலை நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு சுமார் எட்டு இலட்சம் ரூபா பணத்தை செலுத்தி அம்மாவின் உடலை நாட்டிற்கு கொண்டு வந்தோம் என்றும் மகள் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அம்மாவின் பூதவுடல் இன்று (19) பிற்பகல் ஹல்லொலுவ தொரகொல்ல பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் என்றும் மகள் அறிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....