24 6659656b64534
இலங்கைசெய்திகள்

கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் நெகிழ்ச்சி சம்பவம் – இந்திய பெண் மகிழ்ச்சி

Share

கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் நெகிழ்ச்சி சம்பவம் – இந்திய பெண் மகிழ்ச்சி

காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து அதிகாரியின் செயலால் இந்திய பயணி ஒருவர் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

தொடருந்தின் சொகுசு பெட்டியில் பயணித்த 24 வயதான இந்திய பெண் ஒருவர் நான்கரை லட்சம் ரூபாய் பெறுமதியான மடிக்கணினி மற்றும் அதன் பாகங்கள் அடங்கிய பையை மறந்து விட்டுச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் அந்த பையை கண்ட தொடருந்து பாதுகாப்பு அதிகாரி, குறித்த பெண்ணை தேடி ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

மாளிகாவத்தை தொடருந்து பாதுகாப்பு அலுவலகத்தில் பணிபுரியும் சார்ஜன்ட் கபில மாரசிங் என்பவரே இந்த முன்மாதிரிகையான செயலை செய்துள்ளார்.

மாளிகாவத்தை தொடருந்து நிலையத்திற்கு புகையிரதத்தில் வரும் போது அதனை அவதானித்த அதிகாரி பையை கொண்டு வந்து மாளிகாவத்தை தொடருந்து நிலைய உப பொலிஸ் பரிசோதகர் நந்தன பெரேராவிடம் கையளித்துள்ளார்.

இந்திய பெண் பையைத் தேடி வந்த நிலையில் அவரிடம் குறித்த பை ஒப்படைக்கப்பட்டது. பையை ஒப்படைத்ததற்காக இந்திய அதிகாரி மாரசிங்கவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பையை மீண்டும் கண்டுபிடிப்பேன் என ஒரு நொடிகூட நினைக்கவில்லை எனவும் அதிகாரியின் இந்த நேர்மையான செயலை பாராட்டியதுடன் தொடருந்து பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் அவர் புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...