tamilni 372 scaled
இலங்கைசெய்திகள்

ரூபாவின் தற்போதைய பெறுமதி தொடர்பில் வெளிவிவகார அமைச்சரின் தகவல்

Share

ரூபாவின் தற்போதைய பெறுமதி தொடர்பில் வெளிவிவகார அமைச்சரின் தகவல்

கடந்த ஆண்டை விட இலங்கை ரூபாவின் பெறுமதி தற்போது நிலையானதாக மாறியுள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் இந்தியாவின் உதவி குறித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், கடந்த ஆண்டை விட நாட்டின் நிலைமை மிகவும் சிறப்பாக உள்ளது என்று அலி சப்ரி தெரிவித்தார்.

பணவீக்கம் குறைந்துள்ளது, ரூபாவின் பெறுமதி நிலையானதாக மாறியுள்ளது, கையிருப்பு உயர்ந்துள்ளது, சுற்றுலா துறை வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்தியா 3.9 பில்லியன் மதிப்பிலான பல்வேறு உதவிகளை எங்களுக்கு வழங்கியுள்ளது. நாடு என்ற ரீதியில் இந்தியாவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இன்று நாம் அடைந்துள்ள நன்மதிப்பில் பெரும் பகுதியை இந்தியாவுக்கு சாரும் என அமைச்சர் அலி சப்ரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...