21 12
இலங்கைசெய்திகள்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்….! இந்திய ஜோதிடர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

Share

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்….! இந்திய ஜோதிடர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற சில தினங்கள் உள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார் என, நாட்டு மக்களும் சர்வதேசமும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

இந்நிலையில் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடிய வாய்ப்பு உள்ளவர் யார் என்பது தொடர்பான தகவலை இந்திய ஜோதிட நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

கதிர் சுப்பையா என அடையாளப்படுத்தப்படும் இந்திய ஜோதிடர் அமெரிக்காவில் இருந்து செயல்படும் தனது யூடியூப் சேனலில் கணிப்பு ஒன்றை பதிவேற்றியுள்ளார்.

அதில் ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் ஜோதிட நிலையை கருத்திற் கு கொண்டு பகுப்பாய்வு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1949ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி பிறந்த ரணில் விக்ரமசிங்கவின், ஜாதகத்தில், வியாழன் வலுவிழந்து, சந்திரனுடன் இணைந்து, சக்திவாய்ந்த யோகத்தை உருவாக்கியுள்ளது.

2002 வரை அவர் சிறப்பாக செயல்பட்டார், ஆனால் 2004 முதல் நல்ல பலனைத் தரவில்லை. ஆனால் இப்போது அவருக்கு நல்ல பலன்களைத் தர வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர் குறிப்பிட்டுள்ளார்.

1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதி பிறந்த சஜித் பிரேமதாசவின் ஜாதகத்தில், வியாழன் சந்திரன் மற்றும் சனியால் உயர்வு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அவருக்கும் சாதகமான பலன்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் திகதி பிறந்த அநுரகுமார திஸாநாயக்கவின் ஜாதக நிலைக்கு அமைய, கடந்த சில வருடங்களாக சனி மகாதிசையை ஆரம்பித்து, சனியும் ராகுவும் அவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இணைந்துள்ளன.

மேலும் அவரது ஜாதகத்தில் வியாழன், செவ்வாய் மற்றும் செவ்வாய் சேர்க்கை ஒரு சக்திவாய்ந்த கேந்திர யோகம் மற்றும் சிறந்த யோகத்தை உருவாக்குகிறது.

மூன்று வேட்பாளர்களும் மகர ராசியைச் சேர்ந்தவர்கள் என்பதால், முடிவுகளை கணிப்பது மிகவும் கடினமாகும்.

இந்த வேட்பாளர்களுக்கு இடையேயான வெற்றி வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கலாம். தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்தவோரு வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளை பெற மாட்டார்கள்.

அதற்கமைய இரண்டாவது சுற்றில் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இளம் ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுவார் என ஜோதிடர் கதிர் சுப்பையா தனது கணிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...