24 665cd149f1623
அரசியல்இலங்கைசெய்திகள்

அரகலயவிற்கு பின் மீண்டும் தலை தூக்கும் ரவுடி அரசியல்வாதிகள்

Share

அரகலயவிற்கு பின் மீண்டும் தலை தூக்கும் ரவுடி அரசியல்வாதிகள்

அரகலய போராட்டத்திற்கு பின் பின்வாங்கிய ஊழல் மற்றும் ரவுடி அரசியல்வாதிகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை குருநாகலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி இளைஞர் பேரணியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரகலயத்தின் உண்மையான அபிலாஷைகள் நிறைவேற வேண்டுமானால் மக்கள் எழுச்சியை நிலைநாட்ட வேண்டும்.

2022 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சியின் உண்மையான அபிலாஷைகளை நிலை நிறுத்தக்கூடிய ஒரே அரசியல் சக்தியும் அரசாங்கமும் தேசிய மக்கள் சக்தி மட்டுமே.

அரசியல்வாதிகள் அரகலயவில் இருந்து பாடம் கற்கவில்லை மாறாக போதைக்கு அடிமையானவர்களின் எழுச்சி எனக் கூறி மக்களின் எழுச்சியை அவமானப்படுத்துக்கின்றனர்.

மக்கள், குறிப்பாக இளைஞர்கள் எந்தவொரு அரசியல் சக்திகளுடனும் பற்று கொள்ளாமல் பொதுவான அபிலாஷைகளுக்காக வீதியில் இறங்கியதோடு நல்லதொரு அரசியல் நிலைமைக்கான அபிலாஷைகள் அவர்களிடம் உள்ளது.

மோசடி மற்றும் ஊழல் இல்லாத ஒழுக்கமான மற்றும் சட்டபூர்வமான நாட்டை மக்கள் எதிர்பார்த்ததுடன் பொது சமூக நோக்கத்திற்காக வீதியில் இறங்கினர்.

அதை ஆட்சியாளர்கள் உணரவில்லை அத்தோடு அதை அவமானப்படுத்தி போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் விபச்சாரிகள் என தெரிவித்ததோடு இந்த ஆட்சியாளர்கள் கற்கவே இல்லை இவ்வளவு பெரிய எழுச்சியிலிருந்தும் ஒரு பாடம்.

அரசியல் வாதிகள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை அடக்கி ஒடுக்கி அரச சொத்துக்களை விற்கத் தொடங்கியும் அரகலயத்தின் பின்னரும் அதே பழைய பாதையிலேயே பயணிக்கிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...