24 665cd149f1623
அரசியல்இலங்கைசெய்திகள்

அரகலயவிற்கு பின் மீண்டும் தலை தூக்கும் ரவுடி அரசியல்வாதிகள்

Share

அரகலயவிற்கு பின் மீண்டும் தலை தூக்கும் ரவுடி அரசியல்வாதிகள்

அரகலய போராட்டத்திற்கு பின் பின்வாங்கிய ஊழல் மற்றும் ரவுடி அரசியல்வாதிகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை குருநாகலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி இளைஞர் பேரணியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரகலயத்தின் உண்மையான அபிலாஷைகள் நிறைவேற வேண்டுமானால் மக்கள் எழுச்சியை நிலைநாட்ட வேண்டும்.

2022 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சியின் உண்மையான அபிலாஷைகளை நிலை நிறுத்தக்கூடிய ஒரே அரசியல் சக்தியும் அரசாங்கமும் தேசிய மக்கள் சக்தி மட்டுமே.

அரசியல்வாதிகள் அரகலயவில் இருந்து பாடம் கற்கவில்லை மாறாக போதைக்கு அடிமையானவர்களின் எழுச்சி எனக் கூறி மக்களின் எழுச்சியை அவமானப்படுத்துக்கின்றனர்.

மக்கள், குறிப்பாக இளைஞர்கள் எந்தவொரு அரசியல் சக்திகளுடனும் பற்று கொள்ளாமல் பொதுவான அபிலாஷைகளுக்காக வீதியில் இறங்கியதோடு நல்லதொரு அரசியல் நிலைமைக்கான அபிலாஷைகள் அவர்களிடம் உள்ளது.

மோசடி மற்றும் ஊழல் இல்லாத ஒழுக்கமான மற்றும் சட்டபூர்வமான நாட்டை மக்கள் எதிர்பார்த்ததுடன் பொது சமூக நோக்கத்திற்காக வீதியில் இறங்கினர்.

அதை ஆட்சியாளர்கள் உணரவில்லை அத்தோடு அதை அவமானப்படுத்தி போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் விபச்சாரிகள் என தெரிவித்ததோடு இந்த ஆட்சியாளர்கள் கற்கவே இல்லை இவ்வளவு பெரிய எழுச்சியிலிருந்தும் ஒரு பாடம்.

அரசியல் வாதிகள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை அடக்கி ஒடுக்கி அரச சொத்துக்களை விற்கத் தொடங்கியும் அரகலயத்தின் பின்னரும் அதே பழைய பாதையிலேயே பயணிக்கிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...