24 665cd149f1623
அரசியல்இலங்கைசெய்திகள்

அரகலயவிற்கு பின் மீண்டும் தலை தூக்கும் ரவுடி அரசியல்வாதிகள்

Share

அரகலயவிற்கு பின் மீண்டும் தலை தூக்கும் ரவுடி அரசியல்வாதிகள்

அரகலய போராட்டத்திற்கு பின் பின்வாங்கிய ஊழல் மற்றும் ரவுடி அரசியல்வாதிகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை குருநாகலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி இளைஞர் பேரணியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரகலயத்தின் உண்மையான அபிலாஷைகள் நிறைவேற வேண்டுமானால் மக்கள் எழுச்சியை நிலைநாட்ட வேண்டும்.

2022 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சியின் உண்மையான அபிலாஷைகளை நிலை நிறுத்தக்கூடிய ஒரே அரசியல் சக்தியும் அரசாங்கமும் தேசிய மக்கள் சக்தி மட்டுமே.

அரசியல்வாதிகள் அரகலயவில் இருந்து பாடம் கற்கவில்லை மாறாக போதைக்கு அடிமையானவர்களின் எழுச்சி எனக் கூறி மக்களின் எழுச்சியை அவமானப்படுத்துக்கின்றனர்.

மக்கள், குறிப்பாக இளைஞர்கள் எந்தவொரு அரசியல் சக்திகளுடனும் பற்று கொள்ளாமல் பொதுவான அபிலாஷைகளுக்காக வீதியில் இறங்கியதோடு நல்லதொரு அரசியல் நிலைமைக்கான அபிலாஷைகள் அவர்களிடம் உள்ளது.

மோசடி மற்றும் ஊழல் இல்லாத ஒழுக்கமான மற்றும் சட்டபூர்வமான நாட்டை மக்கள் எதிர்பார்த்ததுடன் பொது சமூக நோக்கத்திற்காக வீதியில் இறங்கினர்.

அதை ஆட்சியாளர்கள் உணரவில்லை அத்தோடு அதை அவமானப்படுத்தி போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் விபச்சாரிகள் என தெரிவித்ததோடு இந்த ஆட்சியாளர்கள் கற்கவே இல்லை இவ்வளவு பெரிய எழுச்சியிலிருந்தும் ஒரு பாடம்.

அரசியல் வாதிகள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை அடக்கி ஒடுக்கி அரச சொத்துக்களை விற்கத் தொடங்கியும் அரகலயத்தின் பின்னரும் அதே பழைய பாதையிலேயே பயணிக்கிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...