tamilni 95 scaled
இலங்கைசெய்திகள்

இத்தாலி அனுப்புவதாக நூற்றுக்கணக்கான இலங்கையர்களை ஏமாற்றியவர் கைது

Share

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய போலி வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க, சீதுவ, நீர்கொழும்பு, நுவரெலியா மற்றும் ஜா அல பிரதேசங்களில் வசிக்கும் சுமார் 100 பேருக்கு இத்தாலியில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி சந்தேகநபர் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தேக நபர் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த சில தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஹதுடுவ பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சொகுசு வாகனங்களை பயன்படுத்தி மிகவும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட இவர், அவ்வாறே வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி மக்களிடம் பண மோசடி செய்த குற்றச்சாட்டில் நான்கரை வருடங்களாக விளக்கமறியலில் இருந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

இவர் கைது செய்யப்பட்ட போது, ​​06 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் சொகுசு கார் ஒன்று கட்டுநாயக்க பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இன்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...