rtjy 114 scaled
இலங்கைசெய்திகள்

ஐரோப்பாவில் பெண்ணை கடத்திய இலங்கையர்

Share

ஐரோப்பாவில் பெண்ணை கடத்திய இலங்கையர்

இத்தாலியில் 60 யூரோக்கள் கொடுக்க மறுத்த பெண் ஒருவரை வாகன நிறுத்துமிட பாதுகாப்பு உதவியாளரான இலங்கையர் கடத்திச் சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடத்தி செல்லப்பட்ட தனது காதலியை விடுவிக்குமாறு கோரி காதலன் பொலிஸாரிடம் உதவி கேட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில், இந்த கடத்தலில் ஈடுபட்ட 40 வயதான இலங்கையர் கைது செய்யப்பட்டு, கடத்தல் மற்றும் கப்பம் பெற முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இத்தாலியின் நேபிள்ஸ் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தம்பதியினர் தங்கள் காரை நிறுத்தியுள்ளனர். இதன் போது இலங்கையர் காரணமின்றி அந்த தம்பதியிடம் பணம் கேட்டு, தடுத்து நிறுத்தியுள்ளார்.

ஆணும் பெண்ணும் பணம் செலுத்த எதிர்ப்பு வெளியிட்ட நிலையில், காரில் இருந்த பெண்ணை இறங்கச் செய்து, தன்னுடன் அழைத்துச் சென்று இலங்கையர் அச்சுறுத்தியுள்ளார்.

கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றுமாறு கண்ணீருடன் காதலன் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் காதலியின் கையடக்க தொலைபேசி ஊடாக இலங்கையர் தங்கியிருந்த இருப்பிடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...