24 664b33557a1f8
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கைக்கு உரித்தான தவளை

Share

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கைக்கு உரித்தான தவளை

இலங்கைக்கே (Sri Lanka) உரித்தானது என கூறப்படும் தங்கம் போல மின்னும் அபூர்வ தவளை இந்தியாவில் (India)கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய விலங்கியல் ஆய்வகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கிழக்குத் தொடர்ச்சி மலையின் தென்கோடியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டினியா வனவிலங்கு சரணாலயத்தில் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு இலங்கை தங்க முதுகு தவளையை (golden-backed frog) மீண்டும் கண்டுபிடித்தனர்.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் இந்தியாவில் உள்ள நன்னீர் தவளை இனங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள இந்திய விலங்கியல் துறையைச் சேர்ந்த பரத் பூபதி, காட்டில் உள்ள ஒரு குளத்தின் அருகே இந்த இனத்தின் தவளைகளை சந்தித்த போது இது புதிய இனமாக இருக்கலாம் என்று சந்தேகித்தார்.

இந்திய விலங்கியல் துறையைச் சேர்ந்த தீபா ஜெய்ஸ்வால் இதுபோன்ற தவளைகள் இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றதாக சுட்டிக்காட்டினார்.

இந்த தவளையின் முதுகு தங்க நிறத்திலும் உடல் மேல் பகுதி கருமையாகவும் உள்ளதுடன் இதனுடைய அறிவியல் பெயர் ஹைரா கிராசிலிஸ் (Hylarana gracilis) என்பதாகும்.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...