tamilni 252 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை பெண் கைது

Share

தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை பெண் கைது

சுற்றுலா விசாவில் காதல் கணவருடன் வாழ்வதற்காக தமிழகத்திற்கு வந்து தஞ்சமடைந்த இலங்கை பெண்ணை தமிழ் நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழக மாவட்டம், கடலூரில் உள்ள விருத்தாசலம் வட்டம், டி.வி.புத்தூா் கிராமத்தில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் வசித்து வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் கருவேப்பிலங்குறிச்சி பொலிஸார் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்த போது இலங்கையைச் சேர்ந்த புஷ்பலீலா(37) என்ற பெண் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இதனால், புஷபலீலாவை பொலிஸ் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதன் போது, அவர் சுற்றுலா விசாவில் தமிழகத்தில் வசித்து வருகின்றமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, துபாயில் புஷ்பலீலா வேலை செய்தபோது, டி.வி.புத்தூா் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமாருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் 2013ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்து திருமணம் செய்து கொண்டனர். பின்பு, இருவரும் துபாய் சென்று வாழ்ந்துள்ளனர்.

இதில், விசா காலம் முடிந்ததும் செந்தில்குமார் தமிழ்நாட்டிற்கு திரும்பியுள்ளார். இதனால், கணவரை பிரிந்து இருக்க முடியாத புஷ்பலீலா 2019ஆம் ஆண்டு சுற்றுலா விசா மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்து இங்கேயே தங்கியுள்ளார்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில், புஷ்பலீலாவை பொலிஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...