tamilni 414 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை சிறுமி அசானியின் சொந்த ஊரை நவீன கிராமமாக மாற்ற உள்ள கனடா வாழ் தமிழர்!

Share

இலங்கை சிறுமி அசானியின் சொந்த ஊரை நவீன கிராமமாக மாற்ற உள்ள கனடா வாழ் தமிழர்!

தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் பாடிவரும் இலங்கை தமிழ் சிறுமியான அசானியின் சொந்த ஊரான நயாப்பன தோட்டத்தை நவீன கிராமமாக மாற்றியமைக்க கனேடிய நபரொருவர் முன்வந்துள்ளார்.

அத்தோட்டத்தில் உள்ள மக்களுக்கு தனிவீடுகளை அமைத்துக்கொடுப்பேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

கண்டி புசல்லாவ, நயாப்பன தோட்டத்தை நவீன கிராமமாக மாற்றியமைப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என World Action Foundation னின் தலைவரும், கனடாவில் வாழும் மலையகத் தமிழரான சுபாஷ் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

” மலையக குயில்” அசானியின் சொந்த ஊரான புசல்லாவை, நயாப்பன தோட்டத்தை நவீன கிராமமாக மாற்றியமைப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். அத்தோட்டத்தில் உள்ள மக்களுக்கு தனிவீடுகளை அமைத்துக்கொடுப்பேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவர் Lanka Vision Action Foundation ஊடாக மலையகத்தில் பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் இருந்து காணொளி ஊடாக, நயாப்பன தோட்டத்தை நவீன கிராமமாக மாற்றியமைக்கும் திட்டத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, முதற்கட்டமாக தோட்ட ஆலயத்தை குறுகிய காலப்பகுதிக்குள் புனரமைத்துக்கொடுப்பதற்கு அவர் உறுதியளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...