tamilni 414 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை சிறுமி அசானியின் சொந்த ஊரை நவீன கிராமமாக மாற்ற உள்ள கனடா வாழ் தமிழர்!

Share

இலங்கை சிறுமி அசானியின் சொந்த ஊரை நவீன கிராமமாக மாற்ற உள்ள கனடா வாழ் தமிழர்!

தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் பாடிவரும் இலங்கை தமிழ் சிறுமியான அசானியின் சொந்த ஊரான நயாப்பன தோட்டத்தை நவீன கிராமமாக மாற்றியமைக்க கனேடிய நபரொருவர் முன்வந்துள்ளார்.

அத்தோட்டத்தில் உள்ள மக்களுக்கு தனிவீடுகளை அமைத்துக்கொடுப்பேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

கண்டி புசல்லாவ, நயாப்பன தோட்டத்தை நவீன கிராமமாக மாற்றியமைப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என World Action Foundation னின் தலைவரும், கனடாவில் வாழும் மலையகத் தமிழரான சுபாஷ் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

” மலையக குயில்” அசானியின் சொந்த ஊரான புசல்லாவை, நயாப்பன தோட்டத்தை நவீன கிராமமாக மாற்றியமைப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். அத்தோட்டத்தில் உள்ள மக்களுக்கு தனிவீடுகளை அமைத்துக்கொடுப்பேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவர் Lanka Vision Action Foundation ஊடாக மலையகத்தில் பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் இருந்து காணொளி ஊடாக, நயாப்பன தோட்டத்தை நவீன கிராமமாக மாற்றியமைக்கும் திட்டத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, முதற்கட்டமாக தோட்ட ஆலயத்தை குறுகிய காலப்பகுதிக்குள் புனரமைத்துக்கொடுப்பதற்கு அவர் உறுதியளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...