இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்காக 35 கோடி ரூபாவை செலவிட்டுள்ள அரசாங்கம்

16 8
Share

மகிந்தவுக்காக 35 கோடி ரூபாவை செலவிட்டுள்ள அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவினங்களுக்காக வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கே அதிகம் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதிகளுக்காக 110 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் மகிந்தவுக்காக 32 கோடி 65 லட்சத்து 82 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஆர். பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாசவின் பாதுகாப்பு செலவுகளுக்காக வருடாந்தம் 110 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வருடாந்த பாதுகாப்பு செலவுகள் பின்வருமாறு,

சந்திரிகா குமாரதுங்க 9 கோடி 88 லட்சத்து 71ஆயிரத்து 866 ரூபாய்,

மகிந்த ராஜபக்ச 32 கோடி 65 லட்சத்து 8271 ஆயிரத்து 819 ரூபாய்,

மைத்திரிபால சிறிசேன 18 கோடி 51 லட்சத்து 66 ஆயிரத்து 535 ரூபாய்,

கோட்டாபய ராஜபக்ஷ 3 கோடி 91 லட்சத்து 41 ஆயிரத்து 488 ரூபாய்,

ஹேமா பிரேமதாச 2 கோடி 98 லட்சத்து 78 ஆயிரத்து 008 ரூபாய்,

ரணில் விக்கிரமசிங்க 25 கோடி 33 லட்சத்து 95 ஆயிரத்து 249 ரூபாய்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாவலர்களுக்கான மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம், உணவு மற்றும் குடிநீர், தங்குமிடம், போக்குவரத்து செலவுகள் என மொத்த செலவுகள் 110 கோடி ரூபாயை தாண்டுவதாக தெரியவந்துள்ளது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...