11 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் விசர்நாய் கடியை முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம்

Share

இலங்கையிலேயே விசர்நாய் கடியை (Rabies) முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம் என்ற சிறப்பு அந்தஸ்தை அநுராதபுரம் விரைவில் பெறவுள்ளதாக விலங்கு நலன் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வைத்தியர் சிமித் நாணயக்கார அறிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார். அனுராதபுரம் மாநகர சபை பகுதியில் உள்ள 30 முக்கிய இடங்களில் ஒழிப்புத் திட்டத்தை ஆரம்பிப்பட்டது.

இரண்டு ஆண்டுகளில், மாவட்டத்தின் நாய்களில் சுமார் 80% நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இத்திட்டம் நகர மையத்திலிருந்து படிப்படியாக 15 கிலோமீட்டர் சுற்றளவு வரை விரிவுபடுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு அரசாங்கத்தின் நிதியுதவி கிடைக்கவில்லை என்றாலும், அநுராதபுரம் மாநகர சபை, ஜஸ்டிஸ் ஃபோர் எனிமல்ஸ் ஸ்ரீ லங்கா அமைப்பு மற்றும் உள்ளூர் மக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த இலக்கை அடைய முடிந்தது என்று வைத்தியர் சிமித் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
12 2
இலங்கைசெய்திகள்

நெடுந்தூரப் பேருந்துகள் தொடர்பில் புதிய நடைமுறை

நெடுந்தூரப் பேருந்துகள்(Long-Distance Buses) தேநீர் அருந்த நிறுத்தும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில், உணவு மற்றும் பானங்கள்...

13 2
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள உலக குழுக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அநுர அரசு

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் U.F உட்லர், ரஷ்யாவில் ஒரு பாடநெறிக்காக நாட்டை விட்டு வெளியேறிய நிலையில்...

10 2
இந்தியாசெய்திகள்

விஜய்யின் கைது விவகாரம்! தமிழ்நாட்டின் முக்கிய சட்டத்தரணி வெளிப்படை

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவர்களது நிர்வாகிகள் கைது செய்யப்படுவார்களாயின் அது அரசியல்...

9 2
இந்தியாசெய்திகள்

கேப்டன் விஜயகாந்த் போன்று விஜய்யை வீழ்த்த வகுக்கப்பட்டுள்ள சதி..!

அனைத்து அரசியல் கட்சிகளும் தமது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த விடயத்தை அதிகம் பேசி...