ஐரோப்பிய நாடொன்றில் மர்மமாக உயிரிழந்த இலங்கையர்

tamilnih 87

ஐரோப்பிய நாடொன்றில் மர்மமாக உயிரிழந்த இலங்கையர்

இத்தாலியில் மர்மான முறையில் உயிரிழந்த இலங்கையர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

இத்தாலியில் பணியாற்றிய நிலையில் 51 வயதான சம்பத் சந்தன வீரகொடி என்பவர் உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழந்து பத்து மாதங்கள் கடந்துள்ள போதிலும், சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலையில் உள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இத்தாலி செல்வதற்கு விசாவுக்கு விண்ணப்பித்த போது நிராகரிக்கப்படுவதாக மனைவி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தானும் மகனும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதாக, 48 வயதான நிரோஷா ஷாமலி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

Exit mobile version