பல பில்லியன் நாணயத்தை அழித்த இலங்கை மத்திய வங்கி

24 6635cdf8c7f58

பல பில்லியன் நாணயத்தை அழித்த இலங்கை மத்திய வங்கி

கடந்தாண்டு புழக்கத்துக்கு பொருத்தமற்ற சுமார் 80 பில்லியன் ரூபாய் பெறுமதியான நாணயத் தாள்களை இலங்கை மத்திய வங்கி எரித்து அழித்துள்ளது.

கடந்த வருடம், மத்திய வங்கி நிர்ணயித்த நியமங்களுக்கு பொருத்தமற்ற 79.82 பில்லியன் ரூபா பெறுமதியான நாணயத்தாள்கள் அழிக்கப்பட்டன.

மத்திய வங்கி கடந்த வருடம் 250 மில்லியன் புதிய நாணயத்தாள்களை பெற்றுள்ளது.

அதற்கமைய, 469.28 பில்லியன் ரூபா பெறுமதியான நாணயத் தாள்களும் 571.95 மில்லியன் ரூபா பெறுமதியான நாணயங்களும் புழக்கத்திற்காக வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் நாட்டில் நாணய சுழற்சி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டில் 2.1 சதவீதமாக இருந்த பணப்புழக்கத்தின் வளர்ச்சி 2023ஆம் ஆண்டுக்குள் 15.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதற்கமைய, கடந்த ஆண்டு நாட்டில் புழக்கத்தில் இருந்த பணத்தின் அளவு 1,186.5 பில்லியன் ரூபாயாகும்.

Exit mobile version