10
இலங்கைசெய்திகள்

பயங்கரவாத குற்றச்சாட்டில் கிளிநொச்சி நபர் கைது: கட்டுநாயக்கவில் சுற்றிவளைத்த காவல்துறை!

Share

பயங்கரவாத குற்றச்சாட்டில் கிளிநொச்சி நபர் கைது: கட்டுநாயக்கவில் சுற்றிவளைத்த காவல்துறை!

பிரித்தானியாவில் (UK) இருந்து பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் வெளிநாட்டு பயணத்தடை பெற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

43 வயதுடைய குறித்த சந்தேகநபர் பிரித்தானியாவில் இருந்து நேற்று (01) இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு இலங்கையை விட்டு பிரித்தானிய குடியுரிமையை பெற்றுச் சென்ற சந்தேகநபர், பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியளிப்பதற்காக பணம் சேகரித்து கொழும்பு மற்றும் வன்னிப் பிரதேசங்களில் அவ்வாறான நிதிகளை விநியோகித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய கொழும்பு நீதவான் நீதிமன்றினால் வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் நேற்று இலங்கை திரும்பியதும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கிளிநொச்சியை பூர்வீகமாகக் கொண்ட 43 வயதுடையவர் என்பதும், தற்போது அவர் பிரித்தானியக் குடியுரிமையைப் பெற்றவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்படி, விமான நிலைய காவல்துறையினர் மற்றும் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 15
செய்திகள்இலங்கை

வடமாகாணத்தில் பேரழிவு மீட்புக்குப் பிந்தைய சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமையைத் தொடர்ந்து, பேரிடருக்குப் பின்னரான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சுகாதார...

Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...