24 66405c43b218c
இலங்கைசெய்திகள்

ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள்

Share

ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள்

ரஷ்ய – உக்ரைன் (Russia – Ukraine) போரில் போரிடுவதற்காக 500இற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற இராணுவ உயர் அதிகாரி ஒருவரின் மூலம் ரஷ்யாவுக்கு கடத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தித்தாள் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ரஷ்ய – உக்ரைன் மோதலில் இணைவதற்காக 600இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளார்கள் என தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

இது தொடர்பில் ரஷ்யா மற்றும் இலங்கை அரசாங்ககளுக்கிடையில் எந்த விதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அவர்களுக்கு போலியான சம்பள வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் தற்போது மிகப்பெரிய கடன் சுமையில் இருப்பதாக ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அவர்களில் 15 பேர், போரில் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், அவர்களை மீட்டு நாட்டுக்கு கொண்டு வருவதற்கான மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்களை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...