tamilni 287 scaled
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி! பிரச்சினைகளை தீர்க்க உடனடி தலையீடு

Share

வாகன இறக்குமதி! பிரச்சினைகளை தீர்க்க உடனடி தலையீடு

கடனுதவிக்கான சர்வதேச அங்கீகாரம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை தயாராக உள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள், லொறிகள், பாரவூர்திகள் மற்றும் விசேட தேவைகளுக்கு தேவையான லொறிகள் மற்றும் பாரவூர்திகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதியின் அடிப்படையில் கடன் பத்திரங்களில் (LCs) எழும் பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக தலையிடுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இக்கலந்துரையாடலின் போது, ​​இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச ரீதியில் கடன் பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள் உட்பட பல வகை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை இறக்குமதி செய்வது சிக்கலாக மாறியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மத்திய வங்கி உள்ளிட்ட குழுக்களுடன் கலந்துரையாடி தேவையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கடன் பத்திரங்களுக்கு அரசாங்க உத்தரவாதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை அமைச்சு ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...