24 66929f5edb420
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கும் படுகொலைகள் – சினிமாவை மிஞ்சும் பழிவாங்கும் நடவடிக்கை

Share

இலங்கையை உலுக்கும் படுகொலைகள் – சினிமாவை மிஞ்சும் பழிவாங்கும் நடவடிக்கை

இலங்கையில் பாதாள உலகக் குழுவினருக்கு இடையில் மோதல் நிலைமை தீவிரம் அடைந்துள்ளன.

இந்நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் படுகொலையின் பின்னணியில் பழிவாங்கல் நடவடிக்கையே பிரதான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதாள உலகக் குழுவின் பிரதான தலைவர்களில் ஒருவராக மாகந்துரே மதூஷ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதற்கு பழிவாங்கும் வகையில் மதூஷிற்கு எதிரானவர்களை கொலை செய்யும் வேலைத்திட்டம் ஒன்று வெளிநாட்டிலிருந்து செயற்படுத்தப்பட்டு வருகிறது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று ஒரு சம்பவம் பதிவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாகந்துரே மதூஷின் சடலம் புதைக்கப்பட்ட கொடிகமுவ பொது மயானத்திற்கு முன்பாக, மதூஷின் புகைப்படத்துடன் வாசகமொன்றுடன் கூடிய சிறிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

(“අපේ අයියේ… එක එක්කෙනා එවනවා. අපි එනකන් බලාගන්න…”) “எங்கள் அண்ணனே ஒவ்வொருவராக அனுப்புகிறோம். நாங்கள் வரும் வரை பார்த்துக் கொள்ளுங்கள்” என, குறித்த பதாகையில் எழுதப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அத்துருகிரியவில் வைத்து பிரபல வர்த்தகரான கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் இறுதிக் கிரியைககள் இன்று பொரளை பொது மயானத்தில் இடம்பெற்றன.

இந்நிலையில் கொடிகமுவ பொது மயானத்திற்கு முன்பாக, மதூஷின் புகைப்படத்துடன் வாசகமொன்றுடன் கூடிய சிறிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
17 13
செய்திகள்இலங்கை

நடிகர் விஜய் தனது விருப்பமான நடிகர்: இந்தியா டுடே கொன்க்ளேவ் 2026-ல் நாமல் ராஜபக்ஷ கருத்து

புதுடெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா டுடே கொன்க்ளேவ் 2026’ (India Today Conclave 2026) நிகழ்வில் கலந்துகொண்டு...

16 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: ஒரே நாளில் 968 சந்தேகநபர்கள் கைது!

இலங்கை முழுவதும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கும், சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர நடவடிக்கைகளின்...

15 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு மீண்டும் வரும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள்: 6 ஆவது கடன் தவணைக்கான மீளாய்வு ஆரம்பம்!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று, இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF)...

14 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மரந்தகஹமுல களஞ்சியசாலையைத் திறந்த அரசு: அரிசி விலை உயர்வுக்குத் தீர்வு!

இலங்கையின் அரிசி விலை நிர்ணயத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் மரந்தகஹமுல (Marandagahamula) களஞ்சியத் தொகுதியை, 13...