தொடருந்தில் பயணிக்கும் மக்களுக்கு முக்கிய தகவல்
இலங்கைசெய்திகள்

தொடருந்தில் பயணிக்கும் மக்களுக்கு முக்கிய தகவல்

Share

தொடருந்தில் பயணிக்கும் மக்களுக்கு முக்கிய தகவல்

இலங்கையில் தொடருந்து பயணங்களின் போது பயணப் பொதிகளை எடுத்துக் கொண்டு வேறு பயணப்பொதிகளை வைத்து செல்லும் புது வகையான திருட்டு இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே இடம்பெறும் இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பயணிகள் அவதானமாக இருக்க வேண்டும் என இலங்கை தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் பிரதிச் செயலாளர் சிந்தக சிறிவர்தன தெரிவித்தார்.

தொடருந்தில் பயணிகள் அதிகமுள்ள பெட்டிகளுக்குள் ஏறும் இந்த ஏமாற்ற கும்பல் போலியான பைகளை வைத்து விட்டு உண்மையானவற்றை எடுத்துச் செல்கின்றனர்.

பயணிகளின் தங்கள் பை தொடர்பில் கவனத்தை இழக்கும் வரை காத்திருந்து பைகளை எடுத்துக் கொண்டு இறங்கி விடுகின்றார்கள்.

தொடருந்தில் இருந்து இறங்கும் முன் பைகள் மாற்றப்பட்டிருப்பதனை பயணி கண்டுபிடித்து விட்டால் தவறுதலாக பை மாறிவிட்டதாக கூறி சமாளித்துவிட்டு செல்வதாகவும் தெரிய வந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...