tamilni 27 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை வந்த இத்தாலி தம்பதியை நெகிழ வைத்த இளைஞன்

Share

இலங்கை வந்த இத்தாலி தம்பதியை நெகிழ வைத்த இளைஞன்

இலங்கைக்கு சுற்றுலா பயணம் வந்த இத்தாலி தம்பதியை இலங்கை இளைஞன் ஒருவர் நெகிழ வைத்துள்ளார்.

இலங்கையின் அழகை ரசிக்க வந்த தம்பதி நாட்டை விட்டு வெளியேறும் போது உடன் இருந்த இளம் சுற்றுலா வழிகாட்டியிடம் கண்ணீருடன் விடைபெற்றுள்ளனர்.

குறித்த தம்பதி வழிகாட்டிய இளைஞன் ஒருவரை கட்டி அணைத்து உணர்ச்சிவசப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் நம்பகமான தரமான சேவையை வழங்கிய இலங்கை இளைஞன், இத்தாலிய தம்பதியினரின் கண்களில் கண்ணீரை வரவழைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.

குறித்த இத்தாலி தம்பதி காலி, மிரிஸ்ஸ, யால தேசிய பூங்கா, எல்ல, கண்டி, சிகிரியா, அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களுக்குச் செல்வதற்காக கடந்த 8 ஆம் திகதி இலங்கை வருகை தந்தனர்.

அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக 26 வயதான லஹிரு தில்ஷான் மதுசங்க என்ற இளைஞன் செயற்பட்டுள்ளார்.

அந்த இளைஞனிடம் விடைபெறும் நேரத்தில் விமான நிலையத்தில் ஏற்பட்ட உணர்ச்சிகரமான தருணம், இந்த நாட்டின் சுற்றுலாத் துறையில் ஒரு நபர் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

25 6906ded777bf4
செய்திகள்இலங்கை

நான்கு முன்னணி ஒப்பந்ததாரர்களுக்கு அரச ஒப்பந்தங்களில் பங்கேற்கத் தடை: மத்திய அதிவேக வீதி ஒப்பந்தத்தில் தவறான தகவல் அளித்ததே காரணம்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் (Ministry of Transport, Highways and Urban...

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...