விடுதலைப் புலிகளின் கொள்கையுடையவர் டெலிகொம் நிறுவனத்தை கைப்பற்றுவார்!
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் கொள்கையுடையவர் டெலிகொம் நிறுவனத்தை கைப்பற்றுவார்!

Share

விடுதலைப் புலிகளின் கொள்கையுடையவர் டெலிகொம் நிறுவனத்தை கைப்பற்றுவார்!

இலாபமடையும் டெலிகொம் நிறுவனம், லங்கா வைத்தியசாலை, லிட்ரோ நிறுவனம் ஆகியவற்றை தனியார் மயப்படுத்த அரசாங்கம் துரிதகரமாக செயற்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடகேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய அரசாங்கம் செயற்படுகிறது. நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பாதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க அதாவது தனியார் மயப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

நட்டமடையும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணிகள் மந்தகதியில் உள்ளன. ஆனால் இலாபமடையும் டெலிகொம் நிறுவனம், லங்கா வைத்தியசாலை, லிட்ரோ நிறுவனம் ஆகியவற்றை தனியார் மயப்படுத்த அரசாங்கம் துரிதகரமாக செயற்படுகிறது.

டெலிகொம் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகள் அரசாங்கத்திடமும், 49 சதவீத பங்குகள் தனியார் வசமும் காணப்படுகின்றன. அரசாங்கத்திடம் உள்ள 50 சதவீத பங்குகளையும் தனியார் மயப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

டெலிகொம் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையுடையவர் கைப்பற்றுவார். டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர அறிக்கை சமர்ப்பித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கை பொய் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டு உண்மையை மறைத்து விட்டது. நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களின் செயற்பாடுகளை பலவீனப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது என குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4 5
செய்திகள்அரசியல்இலங்கை

மத்துகம பிரதேச சபை தவிசாளர் சரணடைவு: நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டது!

மத்துகம பிரதேச சபை செயலாளரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த அந்த சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க,...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரியில் குரங்குத் தொல்லையை ஒழிக்க 20 கமக்காரர்களுக்கு இறப்பர் துப்பாக்கிகள் வழங்கல்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி – தென்மராட்சி பிரதேசத்தில் விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் குரங்குத் தொல்லையைக்...

4JVJ5DK AFP 20251227 89488ZV v2 HighRes FilesYemenConflictProtestUaeSaudi jpg
செய்திகள்உலகம்

ஏமனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி – அபுதாபி விரிசல் பின்னணியா?

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம்...

image baba9371d9
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க மேலதிக அவகாசம்: ஜனவரி 31 வரை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்...