tamilni 192 scaled
இலங்கைசெய்திகள்

சாதகமான தகவலை வழங்கிய மத்திய வங்கி ஆளுனர்

Share

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் குறித்து சாதகமான தகவலை இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடன் மறுசீரமைப்பு முன்னணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் உள்நாட்டுக் கடனின் முதிர்ச்சியை நீ;டிக்கவும், அரசாங்க நிதி மீதான உடனடி அழுத்தத்தைக் குறைக்கவும் நோக்கமாகக் கொண்ட உள்நாட்டுக் கடன் மேம்படுத்தல் செயல்பாடு வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கடனை மறுசீரமைப்பதற்காக உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு மற்றும் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி ஆகிய இரண்டுடனும் கொள்கையில் இலங்கை ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.

முக்கிய கடன் வழங்குபவர்களிடமிருந்து நீண்ட கால கடன் நிவாரணத்தைப் பெறுவதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

ஏனைய தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், அவற்றிலும் இது போன்ற ஒப்பந்தங்கள் விரைவில் எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...