24 66595c3ce5437
இலங்கைசெய்திகள்

இலங்கையிலுள்ள சதுப்பு நிலங்கள் தொடர்பில் அறிவிப்பு

Share

இலங்கையிலுள்ள சதுப்பு நிலங்கள் தொடர்பில் அறிவிப்பு

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் ((IUCN) ) தமிழ்நாடு, இலங்கை மற்றும் மாலைதீவுகளை உள்ளடக்கிய கடலோரப் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களை மிகவும் அபாயகரமானதாக பட்டியலிட்டுள்ளது.

தமது முதல் உலகளாவிய மதிப்பீட்டில் இந்த விடயத்தை இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையை அடுத்து. சதுப்பு நிலத்தை பாதுகாக்க தமிழ்நாடு வனத்துறை 20 கிராம சதுப்புநில குழுக்களை அமைத்துள்ளது என்று இந்திய மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மே 22ஆம் திகதி வெளியிடப்பட்ட இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் ஆய்வின்படி வெப்பமண்டல, துணை வெப்பமண்டல மற்றும் உலகெங்கிலும் உள்ள 36 புவியியல் பகுதிகளில் வெப்பமான மிதமான வடமேற்கு அத்திலாந்திக் பிராந்தியத்தைத் தவிர தென் இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவுகள் மட்டுமே ஆபத்தான நிலையைக் கொண்டுள்ளன என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பல்லுயிர் பாதுகாப்பு, உள்ளூர் சமூகங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைத்தல் ஆகியவற்றிற்கு சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகள் முக்கியமானவை.

எனினும், சதுப்பு நிலங்களுக்கு அச்சுறுத்தல்கள் வேகமாக உருவாகி வருகின்றன என்று இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
10 10
செய்திகள்உலகம்

பெய்ரூட் ஹோட்டல் மீதான தாக்குதல்: நான்கு ஈரானிய தூதரக அதிகாரிகள் பலி – ஈரான் கடும் கண்டனம்!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ரமாடா (Ramada) ஹோட்டல் மீது கடந்த மார்ச் 8-ம் தேதி...

09 10
இலங்கைசெய்திகள்

நீர் கட்டண உயர்வு இல்லை: ஜூன் மாதம் கட்டணத் திருத்தம் – அமைச்சர் சுசில் ரணசிங்க!

தற்போதைய சூழலில் நீர் கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்று வீடமைப்பு, நிர்மாண மற்றும்...

08 10
செய்திகள்இலங்கை

இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவல் தீவிரம்: சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

இலங்கையில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனால் உயிரிழந்தவர்களின்...

06 10
செய்திகள்விளையாட்டு

ஆப்கானிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு: பயணச் சிக்கல்களால் நேர்ந்த மாற்றம்!

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர், தவிர்க்க முடியாத...