24 66595c3ce5437
இலங்கைசெய்திகள்

இலங்கையிலுள்ள சதுப்பு நிலங்கள் தொடர்பில் அறிவிப்பு

Share

இலங்கையிலுள்ள சதுப்பு நிலங்கள் தொடர்பில் அறிவிப்பு

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் ((IUCN) ) தமிழ்நாடு, இலங்கை மற்றும் மாலைதீவுகளை உள்ளடக்கிய கடலோரப் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களை மிகவும் அபாயகரமானதாக பட்டியலிட்டுள்ளது.

தமது முதல் உலகளாவிய மதிப்பீட்டில் இந்த விடயத்தை இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையை அடுத்து. சதுப்பு நிலத்தை பாதுகாக்க தமிழ்நாடு வனத்துறை 20 கிராம சதுப்புநில குழுக்களை அமைத்துள்ளது என்று இந்திய மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மே 22ஆம் திகதி வெளியிடப்பட்ட இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் ஆய்வின்படி வெப்பமண்டல, துணை வெப்பமண்டல மற்றும் உலகெங்கிலும் உள்ள 36 புவியியல் பகுதிகளில் வெப்பமான மிதமான வடமேற்கு அத்திலாந்திக் பிராந்தியத்தைத் தவிர தென் இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவுகள் மட்டுமே ஆபத்தான நிலையைக் கொண்டுள்ளன என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பல்லுயிர் பாதுகாப்பு, உள்ளூர் சமூகங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைத்தல் ஆகியவற்றிற்கு சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகள் முக்கியமானவை.

எனினும், சதுப்பு நிலங்களுக்கு அச்சுறுத்தல்கள் வேகமாக உருவாகி வருகின்றன என்று இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...