இலங்கைசெய்திகள்

2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி அணியில் இடம்பிடித்த சாமரி அத்தபத்து

Share
2 45
Share

2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி அணியில் இடம்பிடித்த சாமரி அத்தபத்து

இலங்கையின் கிரிக்கெட் வீராங்கனையான சாமரி அத்தபத்து 2024ஆம் ஆண்டுக்கான, சர்வதேச கிரிக்கெட் சம்மேளன மகளிர் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார்.

9 போட்டிகளில் 45 ஓட்டங்கள் மற்றும் 9 விக்கெட்டுகள் என்ற அடிப்படையில் அவருக்கு இந்த தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சாமரி அத்தபத்து 2024ஆம் ஆண்டுக்கான, தனது முதலாவது ஒருநாள் போட்டியை ஏப்ரல் மாதமே ஆரம்பித்தார்.

இதன்போது, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்து, இறுதிப் போட்டியில் 195 ஓட்டங்களை பெற்று, தமது தொழில் வாழ்க்கையில் சிறந்த ஓட்டங்களை பதிவு செய்தார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கையின் சொந்தத் தொடரில் அவரது தலைமையிலான அணி 3-0 என்ற கணக்கில் முழுமையான வெற்றியைப் பெற்றது. இதன்போது இறுதிப்போட்டியில் சாமரி அத்தபத்து ஒரு அற்புதமான 91 ஓட்டங்களை பெற்றார்.

இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் சம்மேளன ஆண்கள் டெஸ்ட் அணியில் இலங்கையின் கமிந்து மெண்டிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் 2024 ஆம் ஆண்டில் கமிந்து மெண்டிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளார்

அவர், பங்களாதேஸ் சுற்றுப்பயணத்தின் போது, முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களை பெற்றார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...