இலங்கையின் கடைசி ஆண் வரிக்குதிரையும் உயிரிழப்பு

tamilni 305

இலங்கையின் கடைசி ஆண் வரிக்குதிரையும் உயிரிழப்பு

இலங்கையில் இருந்த கடைசி ஆண் வரிக்குதிரையும் உயிரிழந்ததாக தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலை தெரிவித்துள்ளது.

குறித்த வரிக்குதிரை ரிதியகம சபாரி பூங்காவில் இருந்து இனப்பெருக்க செயற்பாடுகளுக்காக தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், குறித்த வரிக்குதிரையை கொண்டு வரும் போது அதற்கு அதிக செறிவு மிக்க ஊசி செலுத்தப்பட்டமையினால் அது உயிரிழந்ததாக தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையின் பணியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இலங்கையில் தற்போது இரண்டு பெண் வரிக்குதிரைகள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version