24 662624972660a
இலங்கைசெய்திகள்

மருந்து இறக்குமதி தொடர்பில் விசேட அறிவிப்பு

Share

மருந்து இறக்குமதி தொடர்பில் விசேட அறிவிப்பு

நாட்டின் மருந்து இறக்குமதியிலிருந்து 30 சதவீதத்தினை 2030ஆம் ஆண்டளவில் குறைக்க முடியும் என இலங்கை மருந்துத் தொழிற்றுறை சம்மேளனம் (Chamber of the Pharmaceutical) தெரிவித்துள்ளது.

மருந்து உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள பைபேக் (buyback) உத்தரவாதமும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

“தற்போது, 15 வீதத்திற்கும் அதிகமான மருந்து உள்ளூர் சந்தை உற்பத்தியால் ஆனது.

கடந்த 10 ஆண்டுகளில் காணப்படுகின்ற குறிப்பிடத்தக்க அதிகரிப்பினால் உள்ளூர் உற்பத்தித் திறன் 2030ஆம் ஆண்டில் ஏறத்தாழ 30 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் மருந்துத் தொழில் சுமார் 60,000 வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. 1950களில் இலங்கை மிகவும் வலுவான மருந்து உற்பத்தித் தளத்தைக் கொண்டிருந்தது.

ஆனால், தேசியமயமாக்கல் காரணமாக பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியா (India), பங்களாதேஷ் (Bangladesh) மற்றும் பாகிஸ்தானுக்குச் (Pakistan) செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

குறித்த தனியார் மருந்துத் தொழிலாளர்கள் அங்கு தொழிற்சாலைகளை நிறுவி இப்போது இலங்கைக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

இந்நிலையிலேயே, உள்ளூர் மருந்துத் தொழில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பினை கொண்டிருக்கின்றது.

அதில் 300 மில்லியன் தனியார் துறை மற்றும் 200 மில்லியன் அரச துறையை சேரந்ததாகும்.

மேலும், அரசு மற்றும் தனியார் ஆகிய இரண்டையும் சேர்த்து 172.13 பில்லியன் ரூபாவும் தனியார் துறையிலிருந்து 129.13 பில்லியன் ரூபாவாகவும் காணப்படுகின்றது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...