1 26
இலங்கைசெய்திகள்

தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்களில் காத்திருக்கும் நற்செய்தி

Share

தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்களில் காத்திருக்கும் நற்செய்தி

இரண்டு வாரங்களுக்குள் நாடு உத்தியோகபூர்வமாக வங்குரோத்து நிலையிலிருந்து வெளியேறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்றையதினம் (18) இடம்பெற்ற “இயலும் சிறிலங்கா” பொது கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடந்தும் அவர் அங்கு தெரிவித்ததாவது, “ஐ.எம்.எஃப், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் நான் கலந்துரையாடினேன். எங்களைப் போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாட்டிற்கு ஏற்ற ஒரு ஒப்பந்தத்தை எட்டினோம்.

இப்போது வங்குரோத்து நிலையை அகற்ற மூன்றாவது குழுவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். அந்த தனியார் பங்குகளும் நாளைக்குள் முடிவடையும்.

நான் இந்த நாட்டின் வங்குரோத்து நிலையை நீக்கும் அதிகாரபூர்வ நிலையை அடைந்துவிட்டேன்.

இந்த விடயங்களை மாற்ற மாட்டொம் என ஐ.எம்.எஃப் மேலாண்மை இயக்குனர் கூறினார், தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரத்தில் அவர்கள் இந்த வேலைத்திட்டங்களை நிறைவு செய்து விடுவார்கள்.” என்றார்.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...