6 3 scaled
இலங்கைசெய்திகள்

என்னை விரட்டியடித்த சம்பவம் எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கும் கோட்டாபய

Share

என்னை விரட்டியடித்த சம்பவம் எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கும் கோட்டாபய

சிறிலங்காவின் அதிபராக நான் தெரிவு செய்யப்பட்ட காலத்திலிருந்து, என்னை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கத்தில் சில வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கட்சிகள் செயற்பட்டதாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் உள்ளடக்கி “பதவியில் இருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி” என்ற தலைப்பிலான புத்தகம் ஒன்றை வெளியிடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அறிக்கை ஒன்றையும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “இந்த நாடு சுதந்திரமடைந்த முதல் அறுபது வருடங்களில் ஒருபோதும் அனுபவித்திராத வகையில் இன்று வெளிநாட்டுத் தலையீடும், உள் அரசியலின் சூழ்ச்சியும் இலங்கையின் வாழ்க்கையின் உண்மையாக மாறியுள்ளது.

தம்மை வெளியேற்றுவதற்கான அரசியல் பிரச்சாரம் இலங்கையின் அரசியலில் ஒரு புதிய அம்சத்தைக் கொண்டுவந்தது என்றும் சுதந்திரம் பெற்றதில் இருந்து தேர்தலுக்குப் பிறகு அமைதியான அதிகாரப் பரிமாற்றங்களை மட்டுமே அனுபவித்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, 2022 ஆம் ஆண்டு நிகழ்வுகள் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு கடுமையான தாக்கங்கள் நிறைந்தவை என்றும் கோட்டாபய சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 99
உலகம்செய்திகள்

அணு ஆயுத விவகாரத்தில் முட்டுக்கட்டை: அமைதி ஒப்பந்தம் இன்றி இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை நிறைவு!

ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் பிரதான நிபந்தனையை ஏற்க...

world 98
செய்திகள்உலகம்

ஹைட்டியில் சுற்றுலாத் தளத்தில் பயங்கரம்: கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி!

ஹைட்டியின் வடக்கு கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஒன்றில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட பாரிய...

world 97
செய்திகள்உலகம்

ஈரான் இனி பழைய ஈரான் அல்ல: அணுசக்தி திட்டங்களை முறியடித்துவிட்டதாக நெதன்யாகு அதிரடி அறிவிப்பு!

ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் “வரலாற்றுச் சாதனைகளை” படைத்துள்ளதாகவும், அதன் அணுசக்தி லட்சியங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலியப்...

world 96
செய்திகள்உலகம்

14 மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பின் அமெரிக்கா – ஈரான் இடையில் எஞ்சியுள்ள முரண்பாடுகள்!

மத்திய கிழக்கில் ஆறு வாரங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பாகிஸ்தான் தலைநகர்...