6 3 scaled
இலங்கைசெய்திகள்

என்னை விரட்டியடித்த சம்பவம் எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கும் கோட்டாபய

Share

என்னை விரட்டியடித்த சம்பவம் எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கும் கோட்டாபய

சிறிலங்காவின் அதிபராக நான் தெரிவு செய்யப்பட்ட காலத்திலிருந்து, என்னை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கத்தில் சில வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கட்சிகள் செயற்பட்டதாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் உள்ளடக்கி “பதவியில் இருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி” என்ற தலைப்பிலான புத்தகம் ஒன்றை வெளியிடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அறிக்கை ஒன்றையும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “இந்த நாடு சுதந்திரமடைந்த முதல் அறுபது வருடங்களில் ஒருபோதும் அனுபவித்திராத வகையில் இன்று வெளிநாட்டுத் தலையீடும், உள் அரசியலின் சூழ்ச்சியும் இலங்கையின் வாழ்க்கையின் உண்மையாக மாறியுள்ளது.

தம்மை வெளியேற்றுவதற்கான அரசியல் பிரச்சாரம் இலங்கையின் அரசியலில் ஒரு புதிய அம்சத்தைக் கொண்டுவந்தது என்றும் சுதந்திரம் பெற்றதில் இருந்து தேர்தலுக்குப் பிறகு அமைதியான அதிகாரப் பரிமாற்றங்களை மட்டுமே அனுபவித்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, 2022 ஆம் ஆண்டு நிகழ்வுகள் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு கடுமையான தாக்கங்கள் நிறைந்தவை என்றும் கோட்டாபய சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...