4 43
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 23 வேட்பாளர்கள் மாயம்

Share

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 23 வேட்பாளர்கள் மாயம்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் மாயமாகி உள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களில் 15 பேர் மட்டுமே தேர்தல் பிரசாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக, நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், சில ஜனாதிபதி வேட்பாளர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மேற்குறித்த 23 பேரில் ஐவருக்கு குறைந்தது சமூக ஊடகங்களான பேஸ்புக் கணக்குகூட இல்லை.

சிலர் தேர்தலில் போட்டியிடுவதாக பகிரங்கமாக அறிவிக்கவில்லை என்றும் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 38 பேரின் புகைப்படங்களை தமது இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு முயன்றபோது பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 15 பேரைத் தவிர ஏனைய 23 பேரிடம் அவற்றை பெற்றுக்கொள்ள முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...