24 66c026b0157f5
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளருக்கு மனைவிகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் – பாதுகாப்பு கோரும் நபர்

Share

ஜனாதிபதி வேட்பாளருக்கு மனைவிகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் – பாதுகாப்பு கோரும் நபர்

ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வேளையில் அவர்களில் ஒருவர் கூடுதல் பாதுகாப்பை வழங்குமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஜனாதிபதி வேட்பாளர் அதிக பாதுகாப்பை கோரியுள்ள போதிலும், அவருக்கு அச்சுறுத்தல் உள்ளதா என ஆராயப்பட்டது.

இதன் போது அவரது திருமணத்திற்கு புறம்பான தொடர்பில் உள்ளமையே பிரச்சினையை தவிர வேறு எந்த பிரச்சனையும் பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பிரதான வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ஷ, விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு விசேட பாதுகாப்பையும், திலித் ஜயவீரவுக்கு அதிக பாதுகாப்பையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர, வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமா என பரிசீலிக்கும் போது, ​​பெண்கள் பிரச்னையை அடிப்படையாகக் கொண்ட வேட்பாளர் மட்டுமே, சிறப்பு பாதுகாப்பு கோரியுள்ளார் என தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், தேர்தல் சட்டங்களுக்கமைய, இவர்கள் ஒவ்வொருவருக்கும் விசேட பாதுகாப்பு வழங்குவது பொருத்தமானதல்ல என தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தெரிவிக்கின்றன.

இந்த 39 வேட்பாளர்களுக்கும் சமமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...