1 4
இலங்கைசெய்திகள்

ஆறு எம்.பிக்களுக்கு பிரதமர் பதவியை தருவதாக உறுதியளித்த மகிந்த!

Share

ஆறு எம்.பிக்களுக்கு பிரதமர் பதவியை தருவதாக உறுதியளித்த மகிந்த!

முன்னர் நடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 6 எம்.பிக்களுக்கு பிரதமர் பதவியை தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் மகிந்த வென்ற பின்னர் அந்த ஆறு எம்.பிக்களுக்கும் ஏமாற்றமே கிடைத்தது என்று வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த நாட்களில் சீர்திருத்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட வேளையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது எதிர்கால அரசியல் பற்றி சிந்திக்காமல் மிகக் கடுமையான சவால்களுக்கு முகம்கொடுத்தார்.

சில அமைச்சர்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டு செயற்படுங்கள் என்று ஜனாதிபதியிடம் கோரினர். உங்கள் செயற்பாடுகள் அடுத்த ஜனாதிபதியாக தெரிவாக தடையாக இருக்கலாம் என்றும் அமைச்சர்கள் வலியுறுத்தினர். ஆனால் ஜனாதிபதி “தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் சரியான நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகளை எடுக்க வேண்டும்” என்றார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...