1 4
இலங்கைசெய்திகள்

ஆறு எம்.பிக்களுக்கு பிரதமர் பதவியை தருவதாக உறுதியளித்த மகிந்த!

Share

ஆறு எம்.பிக்களுக்கு பிரதமர் பதவியை தருவதாக உறுதியளித்த மகிந்த!

முன்னர் நடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 6 எம்.பிக்களுக்கு பிரதமர் பதவியை தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் மகிந்த வென்ற பின்னர் அந்த ஆறு எம்.பிக்களுக்கும் ஏமாற்றமே கிடைத்தது என்று வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த நாட்களில் சீர்திருத்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட வேளையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது எதிர்கால அரசியல் பற்றி சிந்திக்காமல் மிகக் கடுமையான சவால்களுக்கு முகம்கொடுத்தார்.

சில அமைச்சர்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டு செயற்படுங்கள் என்று ஜனாதிபதியிடம் கோரினர். உங்கள் செயற்பாடுகள் அடுத்த ஜனாதிபதியாக தெரிவாக தடையாக இருக்கலாம் என்றும் அமைச்சர்கள் வலியுறுத்தினர். ஆனால் ஜனாதிபதி “தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் சரியான நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகளை எடுக்க வேண்டும்” என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...