tamilni 35 scaled
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் யார்..!பசிலின் வருகைக்காக காத்திருக்கும் கட்சி

Share

ஜனாதிபதி வேட்பாளர் யார்..!பசிலின் வருகைக்காக காத்திருக்கும் கட்சி

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை மக்கள் கேட்கின்றனர். எனவே, அது தொடர்பில் விரைவில் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை எடுங்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப்பீடத்திடம் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி தமது கட்சி வேட்பாளராக தற்போதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பெயரிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி தமது கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை பெயரிட்டுள்ளது.

அதேவேளை, தேசிய மக்கள் சக்தி அநுரகுமார திஸாநாயக்கவை களமிறக்கவுள்ளது.

எனினும், தமது கட்சி வேட்பாளரை நிறுத்துமா அல்லது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குமா என்பது தொடர்பில் மொட்டுக் கட்சியின் எம்.பிக்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகின்றது. இது நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்கா சென்றுள்ள பசில் ராஜபக்ச விரைவில் நாடு திரும்பவுள்ளார், அவர் நாடு திரும்பிய பின்னர் விசேட கூட்டமொன்றை நடத்தவுள்ளார்.

அந்தக் கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி தேர்தல் குறித்த மொட்டுக் கட்சியின் நிலைப்பாடு தெரியப்படுத்தப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...