இலங்கைசெய்திகள்

இந்தியப் பிரதமர் வசீகரமானவர் மற்றும் தொலைநோக்கு பார்வையாளர்: இலங்கை புகழாரம்

24 66919be3f10ed
Share

இந்தியப் பிரதமர் வசீகரமானவர் மற்றும் தொலைநோக்கு பார்வையாளர்: இலங்கை புகழாரம்

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ‘வசீகரமானவர் ‘ மற்றும் ‘தொலைநோக்கு பார்வையாளர்’ என்று வர்ணித்துள்ளார்.

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியான, (பிம்ஸ்டெக்) அமைப்பின் வெளியுறவு அமைச்சின் மாநாட்டுக்காக அவர் புதுடில்லிக்கு சென்றுள்ளார்.

பிரதமர் மோடியுடனான தனது சந்திப்பு பற்றி கருத்து வெளியிட்டுள்ள பாலசூரிய, இந்திய தலைவருடனான தனது முதல் சந்திப்பு இதுவென்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, வசீகரமானவர் மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகியவை, இணைப்புகளில் பின்தங்கியுள்ளதன் காரணமாகவே ஐரோப்பிய ஒன்றியத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தெற்காசியாவின் இணைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்’ என பாலசூரிய கூறியுள்ளார்.

பிம்ஸ்டெக் செயற்கைக்கோள்கள் மற்றும் நனோ செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றங்களும் குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுடனான மேம்பட்ட இணைப்பில், இலங்கை கவனம் செலுத்துவதாக கூறிய அவர், வடகிழக்கு மற்றும் வடமேற்கு இலங்கையில் காற்றாலை மின்சாரத்தை மேம்படுத்துவதன் மூலம் புதிய வருவாய் வழிகளை உருவாக்க முடியும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
19 7
உலகம்செய்திகள்

கனடா பிரதமரை கூப்பிட்டுவைத்து அவமதித்த ட்ரம்ப்: கார்னியின் பதிலடி

தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை அவரது அலுவலகத்தில் சந்தித்தார் கனடா...

20 8
உலகம்செய்திகள்

இந்தியா பின்வாங்கினால் நாங்களும் நிறுத்த தயார்! பாகிஸ்தான் அறிவிப்பு

இந்திய இராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் பதற்றத்தை குறைக்க தயாராக இருக்கிறோம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது....

16 8
உலகம்செய்திகள்

இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்! விஜய் பெருமிதம்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில் பலரும் பல்வேறு கருத்துக்களை...

18 7
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூரில் Jem தலைவர் மசூத் அசார் கொல்லப்பட்டாரா?

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் Jem பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 9 பேர்...