24 65fe1f3d57c4e
அரசியல்இலங்கைசெய்திகள்

சிறீதரன்-சுமந்திரனுக்கு இடையில் தீர்க்கப்படாத பிரச்சினை!

Share

சிறீதரன்-சுமந்திரனுக்கு இடையில் தீர்க்கப்படாத பிரச்சினை!

சுமந்திரனும் ஸ்ரீதரனும் பிரச்சினைகளை எவ்வளவுக்கெவ்வளவு பிற்போடுகிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அப்பிரச்சினை பூதாகரமாகிக் கொண்டே போகும். அல்லது போக வைப்பார்கள் என கம்பபாரதி ஜெயராஜ் தனது உரலார் கேள்வி,உலக்கையார் பதில் என்ற தொகுப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்த தொகுப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

உரலார் கேள்வி :- சுமந்திரனும் ஸ்ரீதரனும் தமக்குள் பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?

உலக்கையார் பதில் :- அது அவர்களுக்குத்தான் தெரியும்.ஆனால் ஒன்று! தீர்ப்பது என்று உண்மையிலேயே முடிவு செய்வார்களே ஆனால், எவ்வளவு விரைவில் அக்காரியத்தைச் செய்யமுடிமோ அவ்வளவு விரைவில் அதனைச் செய்து முடிக்க வேண்டும்.

பிரச்சினைகளை எவ்வளவுக்கெவ்வளவு பிற்போடுகிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அப்பிரச்சினை பூதாகரமாகிக் கொண்டே போகும். அல்லது போக வைப்பார்கள்.

இப்போது பிரச்சினை என்கிற மாட்டின் மூக்கணாங்கயிறு இவ்விருவர் கையிலும் இருக்கிறது.

இன்னும் சில நாட்கள் சென்றால் இவ்விருவரது மூக்கணாங்கயிறும் பிரச்சினைகளை வளர்ப்போரின் கைக்கு போய்விடும். அப்போது இவர்கள் நினைத்தாலும் ஒன்றும் செய்யமுடியாது.

சல்லடையார் சலிப்பு – கூட இருக்கும் கும்பிடு சாமிகள், இவர்களை தம் இஷ்டப்படி இயங்க விடுவார்களா?

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...