விடுதலைப் புலிகளின் ஆட்சியில் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்களா..!
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் ஆட்சியில் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்களா..!

Share

விடுதலைப் புலிகளின் ஆட்சியில் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்களா..!

விடுதலைப் புலிகளின் ஆட்சியில் தமிழர்கள் 30 வருடங்கள் வாழ்ந்தார்கள். ஆகவே புலிகளின் ஆட்சியில் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்களா? என்பதை நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(20.07.2023) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில்,“பொருளாதார பாதிப்பிலிருந்து மீள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவை முறையாக செயற்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும்,அதிகாரப் பகிர்வுகோரியும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள்.

வீடு பற்றி எரியும் போது சிகரெட் பற்ற வைப்பதற்கு அந்த வீட்டிலிருந்து தீ எடுப்பதைப் போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செயற்படுகிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அவசியத்தை ஒட்டுமொத்த தமிழர்களின் அவசியம் என்று குறிப்பிட முடியாது. கூட்டமைப்பினர் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்கின்றார்களாயின் ஏன் அவர்கள் 5 தேர்தல் நிர்வாக மாவட்டங்களில் மாத்திரம் போட்டியிடுகிறார்கள்? ஏனைய மாவட்டங்களில் ஏன் அவர்கள் போட்டியிடுவதில்லை?

காணி விவகாரத்தில் ஒரு மாகாணத்துக்கு மாத்திரம் விசேட சலுகை வழங்க முடியாது.வழங்க வேண்டுமாயின் சகல மாகாணங்களுக்கும் அந்த அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

இலங்கை ஒற்றையாட்சி நாடு.நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வரலாற்றுக் காலத்திலிருந்து பலர் உயிர் தியாகம் செய்துள்ளார்கள்.

30 வருட கால யுத்தத்தில் 29 ஆயிரம் படையினர் உயிர் தியாகம் செய்து, 14 ஆயிரம் படையினர் தமது உடல் அங்கங்களை நாட்டுக்காக இழந்து நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்தார்கள்.

இவ்வாறான அர்ப்பணிப்புகளுடன் பாதுகாத்த ஒற்றையாட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு,தமிழ் அரசியல்வாதிகளின் நோக்கத்துக்காக பிளவுபடுத்த நாங்கள் இடமளிக்கப்போவதில்லை.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை இந்தியா பலவந்தமான முறையில் அறிமுகப்படுத்தியது.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் தற்போது வலுவற்றுள்ளது. ஏனெனில் இந்தியா பல நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகள் அமைப்பின் மறைமுக சக்தி. விடுதலைப் புலிகளின் ஆட்சியில் தமிழர்கள் 30 வருடங்கள் வாழ்ந்தார்கள். ஆகவே புலிகளின் ஆட்சியில் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்களா? என்பதை நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வடக்கு மாகாணம் முன்னேற்றமடைந்துள்ளது. வடக்கில் கல்வி, தொழில் நிலை உயர்வடைந்துள்ளது.

மொத்த சனத்தொகையில் 52 சதவீதமான தமிழர்கள் சிங்களவர்களுடன் நல்லிணக்கத்துடன் வாழ்கிறார்கள். இப்போது நாட்டில் என்ன இனப்பிரச்சினை உள்ளது என்பதை உயரிய சபை ஊடாக கேட்கிறேன்.

அதிகாரப் பகிர்வுக்காக ஜனாதிபதியை சந்தித்து இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிப்பதை தமிழ் அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். தமிழ் அரச யல்வாதிகள் பொய்யுரைப்பதற்கு அச்சமடைந்ததில்லை. சிங்கள அரசியல்வாதிகள் உண்மையைக் கூறுவதற்கு அச்சமடைந்தார்கள். இதுவே இன்றைய பிரச்சினைக்கு மூல காரணியாக உள்ளது.

ஆகவே தமிழ் அரசியல்வாதிகளின் பொய்யை சர்வதேசம் தமது பூகோள அரசியலுக்காக ஏற்றுக்கொண்டது. இலங்கை ஒற்றையாட்சி நாடு. ஆகவே இலங்கையில் சமஷ்டியாட்சி முறைமையில் கட்டமைப்பை தோற்றுவிக்குமாறு தமிழ் தரப்பினர் குறிப்பிடுவது நகைப்புக்குரியது.

எக்காரணிகளுக்காகவும் அதிகாரப் பகிர்வுக்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக்கொள்கிறேன்.”என கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 6978fa83d48ed
செய்திகள்உலகம்

சீனா – ஜப்பான் இடையே விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு: 49 வழித்தடங்களில் சேவைகள் ரத்து; பயணிகளுக்குக் கட்டணத்தை மீள வழங்கத் தீர்மானம்!

சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பெப்ரவரி...

1769561293 Sri Lanka former President Ranil Wickremesinghe Colombo Court 6
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான பொதுச் சொத்து முறைகேடு வழக்கு: இன்று மீண்டும் நீதிமன்றில் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கு, இன்று...

GettyImages 2220430732
உலகம்செய்திகள்

அமெரிக்கா – கனடா இடையே போர் விமானப் போர்: F-35-ஐ வாங்கத் தவறினால் வான்வெளியை ஆக்கிரமிப்போம்– அமெரிக்க தூதுவர் எச்சரிக்கை!

கனடா தனது வான் பாதுகாப்புக்காக அமெரிக்காவின் F-35 போர் விமானங்களை வாங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யத்...

26 69753e82ece93
உலகம்செய்திகள்

மதுரோ கைது: Discombobulator என்ற ரகசிய ஆயுதத்தைப் பயன்படுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீதான தாக்குதலில், அமெரிக்கப் படைகள் ‘Discombobulator’ என்ற மர்மமான ரகசிய...