20 2
இலங்கைசெய்திகள்

ஜலனி பிரேமதாசவின் ஆதிக்கம்! சஜித்துடன் முரண்படத் தொடங்கியுள்ள கட்சி முக்கியஸ்தர்கள்

Share

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் பலரும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் முரண்படத் தொடங்கியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச இருந்த போதும் அவரது மனைவி ஜலனி பிரேமதாச மற்றும் அவரது நண்பர் லக்‌ஷ்மண் ஆகியோரே கட்சியின் முக்கிய விடயங்களைக் கட்டுப்படுத்தி வருவதாக நீண்ட காலமாக விமர்சனம் ஒன்று முன்வைக்கப்படுகின்றது.

அண்மையில் சஜித் பிரேமதாசவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் இது குறித்த அதிருப்தியை நேரடியாக அவரிடம் வெளிப்படுத்தியுள்ளனர்.

எனினும் அவ்வாறான வெளிநபர்கள் யாரும் கட்சியின் விடயங்களில் தலையிடுவதில்லை என்று சஜித் பிரேமதாச மறுப்புத் தெரிவித்துள்ளார்.

ஆயினும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் இந்த நிலை குறித்து மீண்டும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும், வௌியாரின் தலையீடு தொடரும் பட்சத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கடுமையான தீர்மானமொன்றை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சஜித் பிரேமதாசவிடம் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...