20 2
இலங்கைசெய்திகள்

ஜலனி பிரேமதாசவின் ஆதிக்கம்! சஜித்துடன் முரண்படத் தொடங்கியுள்ள கட்சி முக்கியஸ்தர்கள்

Share

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் பலரும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் முரண்படத் தொடங்கியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச இருந்த போதும் அவரது மனைவி ஜலனி பிரேமதாச மற்றும் அவரது நண்பர் லக்‌ஷ்மண் ஆகியோரே கட்சியின் முக்கிய விடயங்களைக் கட்டுப்படுத்தி வருவதாக நீண்ட காலமாக விமர்சனம் ஒன்று முன்வைக்கப்படுகின்றது.

அண்மையில் சஜித் பிரேமதாசவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் இது குறித்த அதிருப்தியை நேரடியாக அவரிடம் வெளிப்படுத்தியுள்ளனர்.

எனினும் அவ்வாறான வெளிநபர்கள் யாரும் கட்சியின் விடயங்களில் தலையிடுவதில்லை என்று சஜித் பிரேமதாச மறுப்புத் தெரிவித்துள்ளார்.

ஆயினும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் இந்த நிலை குறித்து மீண்டும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும், வௌியாரின் தலையீடு தொடரும் பட்சத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கடுமையான தீர்மானமொன்றை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சஜித் பிரேமதாசவிடம் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...