24 661e1fac6cdf7
இலங்கைசெய்திகள்

ஓய்வூதியகாரர்கள் தொடர்பில் அரசின் அதிரடி நடவடிக்கை

Share

ஓய்வூதியகாரர்கள் தொடர்பில் அரசின் அதிரடி நடவடிக்கை

இலங்கையில் இருந்து வெளிநாடு சென்றுள்ள 485 பேரின் ஓய்வூதியம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான செல்லுபடியாகும் உயிர்வாழ்ச் சான்றிதழை வழங்காத காரணத்தால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியம் பெறுவோர் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கு ஆண்டுக்கு ஒருமுறை உயிர்வாழ் சான்றிதழை ஓய்வூதியத் திணைக்களத்திடம் வழங்குவது கட்டாயமாகும். இல்லையெனில் ஓய்வூதியத் தொகையை நிறுத்த ஓய்வூதிய திணைக்களம் நடவடிக்கை எடுக்கும்.

இதேவேளை, 2023ஆம் ஆண்டு 1061 பேரின் ஓய்வூதியம் செல்லுபடியாகும் சான்றிதழ் வழங்காத காரணத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதுடன், அதில் 576 பேர் சான்றிதழைப் புதுப்பித்துள்ளனர்.

மேலும், 2022ஆம் ஆண்டு செல்லுபடியாகும் உயிர்வாழ்ச் சான்றிதழ் வழங்காததால், 2833 பேரின் ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இதுவரை 1250 பேர் மட்டுமே தங்கள் சான்றிதழை புதுப்பித்துள்ளனர்.

எவ்வாறாயினும், செல்லுபடியாகும் சான்றிதழ்கள் வழங்கப்படாமையால் அவர்களின் ஓய்வூதியம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதனை மீண்டும் செயற்படுத்துவதற்கு ஓய்வூதியம் பெறுவோர் உரிய சான்றிதழ்களை தூதரகத்திற்கு தனிப்பட்ட முறையில் வழங்க வேண்டும் எனவும் திணைக்களம் கூறுகிறது.

வசிப்பிட சான்றிதழை தூதரகத்தால் இலவசமாக சான்றளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....