13 35
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு: அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

Share

கடவுச்சீட்டு பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு: அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

தற்போது காணப்படும் கடவுச்சீட்டு நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக, விரைவான டெண்டர் செயல்முறை மூலம் 500,000 கடவுச்சீட்டுக்களை வாங்குவதற்கான முடிவை அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) இன்று (23) இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைக் குறிப்பிட்டு, தற்போதைய முறையின் கீழ் புதிய கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான காலக்கெடுவை தொடர்பில் அமைச்சர் தெளிவு படுத்தினார்.

இதன்படி, இன்று (ஜனவரி 23) யாராவது நிகழ்நிலையில் முன்பதிவு செய்தால் கடவுச்சீட்டு வழங்குவதற்கான ஆரம்ப திகதி ஜூன் 27 ஆகும்.இது சுமார் ஐந்து மாத காத்திருப்பு நேரத்தை பிரதிபலிப்பதாக அமைச்சு குறிப்பிட்டார்.

எனினும், அவசரகால நிகழ்வுகளுக்கு, ஒரே நாளில் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கோரிக்கைகளை மதிப்பீடு செய்து அங்கீகரிக்க குடிவரவுத் துறைக்குள் ஒரு பிரத்யேக குழு நிறுவப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்த அமைப்பு வழக்கமான சேவைகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் அதே வேளையில் அவசரநிலைகளையும் பூர்த்தி செய்யும் நோக்கத்தில் நிறுவப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...