tamilni 80 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வந்த மர்ம பொதிகள்

Share

இலங்கைக்கு வந்த மர்ம பொதிகள்

இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட பொதிகளை ஆய்வு செய்த போது அதில் 1406 கிராம் கஞ்சா மற்றும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுங்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் முன்னிலையில் கொழும்பு தபாலகததில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 14,085,000 ரூபாய் எனத் தெரியவந்துள்ளது.

அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் உள்ளவர்களின் முகவரிகளுக்கு இந்த பொதிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நீண்ட நாட்களாக பொதிகள் அகற்றப்படாததால் அதிகாரிகள் அவற்றினை ஆய்வு செய்தனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 86 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருள் தொகையை தபால் மதிப்பீட்டு அலுவலகத்தின் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...