2 40
இலங்கைசெய்திகள்

அரசியல் காற்று தம்பக்கம் வீசும் வரை காத்திருந்த அநுர

Share

அரசியல் காற்று தம்பக்கம் வீசும் வரை காத்திருந்த அநுர

இலங்கை ஒரு வரலாற்று கட்டத்தில் உள்ளதாக ‘த காடியன்’ தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது அவர் வெறும் 3.8 வீத வாக்குகளைப் பெற்ற அநுரகுமார திசாநாயக்க இந்த வாரம் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) என்ற மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த அநுரகுமார, தேசிய மக்கள் சக்திக்கும் தலைமை தாங்குகிறார்.

1970களின் முற்பகுதியிலும் 1980களின் பிற்பகுதியிலும் ஜே.வி.பி இரண்டு பெரும் கிளர்ச்சிகளில் ஈடுபட்டது. இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின. இதன்போது, பாரிய வன்முறைகள் ஜே.வி.பி மற்றும் அப்போதைய அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், புரட்சிகர மார்க்சிச – லெனினிசம் மற்றும் சிங்கள இன – தேசியவாதம் ஆகியவற்றின் கலவையிலிருந்து ஜேவிபி கட்சி வெகுதூரம் வந்து, மையவாத பிரதான நீரோட்டத்திற்கு நகர்ந்துள்ளது.

நாட்டின் தெற்கே கிராமப்புறங்களில் அதன் வேர்களில் இருந்து, கட்சி புறநகர் மற்றும் சிறிய நகரங்களில் அதன் தளத்தை மீண்டும் உருவாக்கியது. அத்துடன் ஊழலின் பிரச்சினையை கையில் எடுத்து நடுத்தர வர்க்கத்தை கூட கவர்ந்தது.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...