tamilnif 3 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மருந்து நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை

Share

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மருந்து நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மருந்து நிறுவனங்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் பணிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ்துறை அதிகாரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அண்மையில் மருந்து ஊழலில் ஈடுபட்ட நிறுவனத்திற்கு மருந்துகள் விநியோகித்த நிறுவனங்கள் மீது அதிகாரிகள் கூடுதல் ஆய்வு நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மனித இம்யூனோகுளோபுலின் ஊழல் தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியமும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, முன்னாள் அமைச்சின் செயலாளர் ஜனக சிறிசந்திரகுப்த மற்றும் பலர் தற்போது இந்த ஒப்பந்தம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...

Ravindra Wijegunaratne
இலங்கை

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு பிணை.

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன 2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்...

ஜாலிய விக்ரமசூரியவை
இலங்கை

 அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவருக்கு பிடியாணை.

அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தலை,மறைவாகியுள்ள, அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதர்...

Semmani Manhole
இலங்கை

மண்டையோடுகளின்றி காணப்பட்ட என்பு தொகுதிகள் – செம்மணியில் அவலம்.

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 13 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,...