1 10
இலங்கைசெய்திகள்

மூன்று அமைச்சர்களின் கைகளில் நாடு! அநுர அரசாங்கத்தின் மிக முக்கிய தீர்மானங்கள்

Share

மூன்று அமைச்சர்களின் கைகளில் நாடு! அநுர அரசாங்கத்தின் மிக முக்கிய தீர்மானங்கள்

100இற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பிரச்சினைகளிற்கு தீர்வை காணத்தவறிய சூழ்நிலையில் மூன்று அமைச்சர்கள் மாத்திரம் இன்று இந்த நாட்டை நிர்வகிக்கின்றோம் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னரான இந்த ஐந்து வாரங்களில் நாங்கள் மிக முக்கிய தீர்மானங்களை மாத்திரமே எடுத்துள்ளோம் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என சில அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர். அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை ஐந்து வருடங்களிற்காகவே சமர்ப்பித்தது. ஐந்து மாதங்களிற்காக இல்லை. ஐந்து வருடகாலத்தில் பூர்த்தி செய்வதற்காகவே அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை சமர்ப்பித்தது.

சஜித்பிரேமதாச போன்ற சில அரசியல்வாதிகள் வேண்டுகோள் விடுப்பது போல ஐந்து வாரங்களிற்குள் அவற்றை நிறைவேற்ற முடியாது.

நாங்கள் மேலும் தீர்மானங்களை எடுக்க வேண்டும், ஐந்து வருடங்களிற்குள் நிறைவேற்றுவதற்கு தீர்மானித்த விடயங்களை ஐந்து வருடங்களிற்குள் பூர்த்தி செய்ய முடியாது.

நாங்கள் இன்னமும் அரசாங்கத்தை கூட அமைக்கவில்லை, கடந்த ஐந்து வாரங்களில் மிக முக்கியமான தீர்மானங்களை மாத்திரம் எடுத்தோம்.

100இற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பிரச்சினைகளிற்கு தீர்வை காணத்தவறிய சூழ்நிலையில் மூன்று அமைச்சர்கள் நாட்டை நிர்வகிக்கின்றோம்.

நாங்கள் புதிய பாதையில் பயணிக்கின்றோம் என்பதை காண்பித்துள்ளோம், நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படுவதற்கு ஊழல் அரசியல் கலாசாரம் ஊழல் போன்றவையே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...

Sarath Weerasekera
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் புலிகளுக்கு அஞ்சிச் செயல்படுகிறது – சுதந்திர தின விழா குறித்து சரத் வீரசேகர காட்டம்!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் இராணுவ அணிவகுப்புகள் மற்றும் வர்ணனைகள் கையாளப்பட்ட விதம்...

1689990497 1689990167 Ranil Wikramasingha L
செய்திகள்அரசியல்இலங்கை

ஜென் ஸீ தலைமுறையிடம் அரசியலை ஒப்படைப்போம்: ரணில் விக்கிரமசிங்கவின் SMART UNP பிரகடனம்!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ‘ஸ்மார்ட்’ அரசியலைத் தழுவிய ஒரு புதிய தலைமுறைத் தலைமைத்துவத்தை நோக்கி...